அதீத செல்லம் ஆபத்தின் அறிகுறி!

இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! 



அதீதச் செல்லங்கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் தம்முடைய உலகத்திற்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. யாருக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒரு கட்டத்தில் அவை பெற்றோரையும் புறக்கணிக்கின்றன.
 அன்பு செலுத்துதல் என்பது வேறு, செல்லங்கொடுத்தல் என்பது வேறு என்பதே நமக்குத் தெரியவில்லை. 




அரவணைப்பு, கட்டியணைத்தல், தொடர்பில் இருத்தல், தன் வேலையைத் தானே செய்ய ஊக்கப்படுத்துதல், உணர்வுகளை மதித்தல் இவையெல்லாம் அன்பு செலுத்துதலில் அடக்கம். இவை கட்டாயம் குழந்தைக்குத் தரப்பட வேண்டும். செல்லங்கொடுத்தல் என்பது குழந்தையால் செய்ய முடிகிற விஷயங்களையும் பெற்றோரே செய்வது, சதா புகழ்வது, கைகாட்டுகிற எல்லாவற்றையும் வாங்கித் தருவது, அடம்பிடித்தலை ஏற்பது, ஒழுக்கமீறலை ரசிப்பது. பெரும்பாலான பெற்றோர் முன்னதையும் பின்னதையும் குழப்பிக்கொள்கின்றனர். குழந்தைக்கு உட்காரத் தெரிந்ததும் உணவை ஊட்டிவிடுவதைப் பெற்றோர் நிறுத்திவிட வேண்டும். 




தட்டில் இருக்கும் சோற்றைச் சிந்திச் சிதறித் தனக்குத் தேவையானதைக் குழந்தையே அள்ளி உண்ணும். ஆனால், பாசக்காரப் பெற்றோர் பள்ளி செல்லும் குழந்தை களுக்கும் ஊட்டியே விடுகின்றனர். நடக்கத் தெரியும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு திரியக் கூடாது. குறிப்பாக அப்பாக்கள், வளர்ந்த பிள்ளைகளையும் கைகளில் தூக்கி வைத்திருப்பதை வீதிகளில், கடைகளில் பார்க்க முடியும். இதன் பெயர் அன்பன்று. குழந்தை தன் வேலையைத் தானே செய்வதைப் பெற்றோர் தடுக்கின்றனர். 




தத்தித் தத்தி நடக்கும்போதே பெருக்குமாற்றை எடுத்து வீட்டைப் பெருக்க எத்தனிப்பதைப் பார்க்க முடியும். பெண் குழந்தை என்றால் இதெல்லாம் இப்பச் செய்ய வேண்டாம் என்கிறோம். ஆண் பிள்ளை என்றால் இதெல்லாம் நீ எப்பவுமே செய்யக் கூடாது என்று தடுக்கிறோம். ஆனால் குழந்தைகள் பால் பேதமில்லாமல் எல்லா வேலைகளையும் செய்ய விருப்பம் காட்டுகின்றன. ஆண் பெண் வித்தியாசமில்லாமல், இன்றைய குழந்தைகளுக்கு எந்த வேலையும் செய்யத் தெரியாது என்பதுதான் உண்மை. துவைப்பது, வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, சமைப்பது போன்ற அடிப்படை வேலைகளுக்கு நாம் அவர்களைப் பழக்கவில்லை. 




வீட்டு வேலைகளைக் கற்பது பெண் குழந்தைகளின் சுமையாக இருந்த அவலம் தற்போது மாறிவருகிறது. இன்றைய இளைஞர்கள் பைப் கசிந்தால் சரிசெய்வது, ட்யூப் லைட்டை மாற்றுவது போன்ற சாதாரணப் பணிகளுக்குக்கூட app-ஐத் திறந்து ஆளைத் தேடுகின்றனர். அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வேலைகளைக்கூட அவர்களுக்கு நாம் கற்பிக்கவில்லை. வீட்டில் செய்வதற்கு எந்த வேலையும் இல்லாததால் அவர்கள் பிற்பகல் வரை உறங்குகின்றனர். நள்ளிரவு கடந்தும் செல்ஃபோனில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதனால், சோம்பேறித் தலைமுறையாக இன்றைய இளைஞர்கள் தலையெடுத்ததன் காரணம் நமது செல்லங்கொடுத்தல். வீட்டில் என்ன வேலை என்றாலும் அம்மாவோ அப்பாவோதான் செய்ய வேண்டும். 




 ஒரு நாள் மிக்ஸி போடும்போது ஹை வோல்டேஜ் ஆகி ஃப்யூஸ் போய்விட்டது. டம்மென்ற சத்தத்தைக் கேட்டுக்கூட அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை. ஒருமணி நேரம் கழித்து, உள்ளே இருந்து அவனது குரல் மட்டும் வந்தது, `அம்மா, ஏ.சி ஓடல’. நாள் முழுவதும் அந்த ஆன்ட்டிதான் மாறி மாறி போன் செய்து ஆள்களைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த இளைஞன் படுத்தே கிடந்தான். அண்மையில் விசாரித்தபோது தெரிந்தது, அவனுக்கு மணமான சில மாதங்களிலேயே விவாகரத்தாகி அம்மா வீட்டில் இருக்கிறானாம். செல்லங்கொடுத்து வளர்க்கப்படுகிறவர்களோடு வாழ்வது மிகவும் கடினம். சோம்பேறித்தனமும், தான் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற ஆதிக்க உணர்வும் அவர்களிடம் மேலோங்கி இருக்கும்.




இந்தியக் குடும்பங்களில் ஆண் பிள்ளைகள் செல்லத்தால் சீரழிக்கப்பட்டனர். இப்போது பெண் குழந்தைகளுக்கும் அது பரவிவருகிறது. நான் முன்பு ஒரு பத்திரிகையில் பணிபுரிந்த போது, கல்லூரி படிக்கும் மகள்களைக் கொண்ட தந்தை ஒருவர் சக ஊழியராக இருந்தார். மூத்த மகளை இன்ஜினீயரிங் சேர்ப்பதற்குப்பட்ட கடனை அவர் அடைத்து முடிக்கும் போது திருமணம் செய்துவைக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. மகள் பேரில் 30 பவுன் நகை சேர்த்து வைத்திருந்தார். ஆனால், அந்தப் பெண், தனக்கு நூறு பவுன் நகை போட வேண்டுமென்று தந்தையிடம் டிமாண்ட் செய்தாள். அதற்காக ஊரில் உள்ள சொத்தை விற்கச் சொல்லி அடம்பிடித்தாள். `அதை உன் தங்கைக்காக வைத்திருக்கிறேன்’ என அவர் சொன்ன போது, `அவளுக்கு இந்த வீடு இருக்குல்ல’ என்றாளாம். `எங்கள பத்தி அவ கொஞ்சம்கூட யோசிக்க மாட்டேங்கிறா’ என்று புலம்பினார். 




 கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்துப் பழக்கப்படுத்தினால், ஒரு கட்டத்தில் பிள்ளைகள் உயிரையும் கேட்பார்கள். கொடுப்பீர்களா? செல்லங்கொடுக்கும் பெற்றோர் நல்லொழுக்கத்தைவிடக் குழந்தைகளின் திறமைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஒவ்வொரு குழந்தையும் தனிமனிதராக வளர்ந்தாக வேண்டும். எவ்வளவுதான் பொத்திப் பாதுகாத்து வளர்த்தாலும் ஒரு புள்ளியில் தன் வாழ்க்கையை, தன் தோல்விகளை, தன் பிரச்னைகளைத் தானே சமாளித்தாக வேண்டும். ஆனால், நமது அதீதப் பாதுகாப்பு வளர்ப்பு முறையால் அவை திக்கற்று நிற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. செல்லமாக வளரும் பிள்ளைகளால் வாழ்வின் உண்மைகளை ஏற்க முடியாது.




 குழந்தைகளைக் கைக்குள்ளிருந்து விடுதலை செய்யுங்கள். அவர்கள் சிரமப்படட்டும். எப்போதும் ஏ.சி போட்டு வைத்திருந்தால் வெயிலுக்கும் குளிருக்கும் எப்படி அவை பழகும்! வெளியே கூட்டி வாருங்கள். வெறுங்காலில் நடக்கச் சொல்லுங்கள். பொதுப் போக்குவரத்தில் பயணிக்கட்டும். துணிகளை மடிப்பது, இஸ்திரி போடுவது (வளர்ந்த பிள்ளைகளை) புத்தகங்களை அடுக்குவது, ஷெல்ஃபை க்ளீன் செய்வது போன்ற தம் வேலைகளைத் தாமே செய்யட்டும். பொருள்களைக் கேட்டால் `நோ’ சொல்லுங்கள். அன்பைக் கேட்டால் அள்ளித் தாருங்கள். குழந்தைகள்மீது பெற்றோர் எடுத்துக்கொள்ளும் உரிமைதான் செல்லங்கொடுத்தல். பிரதிபலனாக, தான் என்ன சொன்னாலும் கேட்டு நடக்க வேண்டுமென மூளையை கண்டிஷன் செய்யும் சுயநலனே அதில் நிறைந்திருக்கிறது. 




 தானே உலகம் என்று வாழ்ந்தால் போதும் என நினைக்கின்றனர். ஆனால், பெற்றோரின் காலத்திற்குப் பின்னரும் இந்தப் பூமியில் குழந்தை ஒரு தனிமனிதராக, சமூக விலங்காக வாழ்ந்தாக வேண்டும். கைகளிலிருந்து வெளியேறிக் கல்வி கற்கவும், பொருளீட்டவும், தனக்கெனத் துணையை அமைத்துக்கொள்ளவும், போகும் இடங்களில் நல்ல மனிதராக அறியப்படவும் வேண்டும். அந்தச் சமூக வாழ்க்கைக்கு வெகுமுன்னரே தயார்படுத்துங்கள். நிறைய மனிதர்களுடன் பழகி, கலந்து, வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது. அப்படியான வாழ்க்கைக்கு நல்லொழுக்கமே ஆதாரம். அதைக் கற்பியுங்கள். உங்களின் கண்டிப்புகளும் இல்லைகளும் அதைத் தன் காலில் நிற்கப் பழக்கட்டும்! 




நீண்ட காலம் ஐசியு என்ற தீவிர சிகிச்சை பிரிவில் பிறர் உதவியினால் வாழ்ந்த ஒருவரினால் சுயமாக பல போராட்டங்களினால் பலஹீனம் அடையாமல் போராட முடியுமா? இதேபோலத்தான் எல்கேஜி படிப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை பிறர் சொல்லிக் கொடுத்து அடிப்படையிலேயே வசதிகளை அனுபவித்துக் கொண்டு படித்த ஒருவரினால் சுயமாக வேலையைத் தேடி அல்லது வேலையை உருவாக்கி வாழ முடியுமா? Motivation” என்ற பெயரில் பெரும்பாலான குழந்தைகள் “இளம் வயதிலேயே” அவர்களுக்கு தேவையற்ற விருப்பங்கள் உருவாக்கப்படுகின்றன.அந்த விருப்பங்கள் பெற்றோர்களின் “40-வயதில்” ஏற்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் உள்ளன. 


அவர்கள் தனக்கு கிடைக்காத விசயத்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று முறையற்ற முறையில் ஊக்கப்படுத்துவதன் விளைவு குழந்தைகள் இளம் வயதிலேயே தான் செய்வது சரி என்று முடிவெடுத்து செயல்படுகிறது.ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு தான் பெற்றோர்களை கண்டு கொள்ளாமல் தான் விரும்புவதை மட்டுமே நிறைவேற்ற பெற்றோர்களை நிர்பந்திக்கிறது.பெற்றோர்கள் சொல்லும் எந்த செயலையும் எடுத்துக் கொள்ளாமல் தான் சொல்லுவதே சரி என்று எதிர்ப்புகாட்டுகிறது.இந்த சமயத்தில் தான் பெற்றோர்கள் குழந்தைகள் மீது குற்றம் சொல்கின்றனர்.ஆனால் இதற்கு காரணம் குழந்தைப் பருவத்தில் பெற்றோர்களும் சில பேச்சாளர்களும் ஏற்படுத்திய வயதிற்கு மீறிய உளவியல் தன்மைக்கு மாறாக ஏற்பட்ட ஊக்கமூட்டல் தான். 

பெற்றோர்களே உங்களுடைய குழந்தைகளுக்கு இதுபோன்ற விழிப்புணர்வை செயல் உணர்வை ஏற்படுத்தி உள்ளீர்களா?

குழந்தை வளர்ப்பு என்பது பெரும்பாலான நடைமுறை அடிப்படையிலான விளக்கம் என்னவென்றால் குழந்தைகளுக்கு பள்ளி கல்லூரியில் சேர்ப்பது உணவு உடை கொடுப்பது வசதியாக வாழ்க்கையை வாழ புதிய வாகனங்களை வாங்கித் தருவது உறவினர்கள் முன் தங்கள் குழந்தைகளை பற்றி அதிகமாக மதிப்பை கூட்டி பேசுவது என்கின்ற செயல் மட்டுமே படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடு இன்றி நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆனால் எங்களின் எம் எஸ் கே லைஃப் கிளினிக் பவுண்டேஷன் ஆய்வுப்படி பெற்றோர்கள் என்பது உணவு கொடுப்பது உடை கொடுப்பது மட்டுமல்ல அதற்கப்பால் நடத்தையை கற்றுக்கொடுத்து சரிப்படுத்துவது உணர்ச்சிகளை முறைப்படுத்த வழிகாட்டுவது பணத்தின் உடைய மதிப்பு உழைப்பின் மூலமாக கிடைக்கும் என்பதை ஆலோசனையின்றி அதாவது அறிவுரை இன்றி செயல் உரையாக கொடுக்க வேண்டும்.


ஆனால் இன்றைய பெற்றோர்கள் தங்களுடைய வாகனத்தை இன்டீரியர் டெக்கரேசன் செய்வது போல குழந்தைகளுக்கு ஆடம்பர பொருட்களை வாங்கி கொடுப்பது ஆடம்பரமான உணவு விடுதிக்கு அழைத்துச் செல்வது அடுத்தவர்களை விட குழந்தைகள் தான் முக்கியம் என்கின்ற செயலை பதிவைத்தல் பிறருடைய உணர்வுகளுக்கு மதிப்பை கொடுக்க வேண்டும் என்கின்ற நடைமுறை பழக்கத்தை உருவாக்காமல் நீ செய்வது தான் சரி என்ற ஒற்றை சிந்தனையை ஊட்டி வளர்த்தால் ஒரு மிகப்பெரிய எதிர்வினையை உருவாக்கும் என்பது ஒவ்வொரு பெற்றோருடைய 50 வயதில் அதாவது குழந்தைக்கு அல்லது இவர்கள் குழந்தை என்று சொல்லக்கூடிய அந்த வாரிசுக்கு 30 வயது ஆகும் பொழுது தான் புரிந்து கொள்ள முடிகிறது.. நாம் குழந்தையை வளர்த்து இருக்கிறோம் ஆனால் பழக்கவில்லை.. சமூக நெறிமுறைகளை வழிமுறைகளை கட்டுப்பாடுகளை உறவுமுறைகளை பேச்சு வழக்கத்தை கற்றுக் கொடுக்கவில்லை என புரிந்து கொள்வதற்கு இவர்கள் பார்த்தால் மட்டுமே உணர முடிகிறது.


குழந்தையை தன்னுடைய வகுப்புத் தோழன் போல் நடத்தும் நவீன பெற்றோர்கள் தாங்கள் வளர்க்கப்பட்ட குழந்தை தனக்கு மாறுபட்டு நடந்தாலோ அல்லது தவறு செய்துவிட்டு அந்த தவறை நான் செய்து விட்டேன் எனக் கூறினாலொ.. அல்லது நான் செய்ததில் தவறு என்ன இருக்கிறது என்று எதிர்க்கேள்வி கேட்கும்பொழுது அப்போது தான் ஒரு சில பெற்றோர் மட்டும் புரிகிறது நாம் வகுப்பு தோழர்கள் போல் வளர்த்தது தவறு பெற்றோராக வளர்க்கவில்லை
 ஆகவே பெற்றுக்கொடுக்க வேண்டிய மதிப்பை எப்படி கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லித் தரவில்லை என புரிந்து கொள்கின்றனர் மற்றும் சிலரோ இது அவருடைய இயல்பு பின்னாடி மாறிவிடுவான் அல்லது அவனுடைய பெயர் ராசி அப்படித்தான் கிரகபலன் அப்படித்தான் கடவுளுடைய படைப்பு அப்படித்தான் என தன்னுடைய குறையை மறைப்பதற்கு பிரபஞ்ச சக்தியை காரணம் காட்டி விடுகின்றனர் இது முற்றிலும் உளவியல் சார்ந்த கோளாறின் வெளிப்படையான நடத்தை என்பது அவர்களுக்கு புரிவதில்லை.




 சுயமாக சிந்திக்க முடியாமல் பிறர் சொல்லிக் கொடுப்பதை மட்டுமே நம்பி வாழும் கல்விசார்ந்த நடைமுறையில் இருந்து விடுபட்டு சுயமாக சிந்தித்து சமூகத்தோடு இணைந்து அல்லது சமூக பிரச்சினைகளுக்குபின்வாங்காமல் தொடர்ந்து சிந்தித்து செயல்படக்கூடிய சந்ததிகளை உருவாக்க நாங்கள் துவக்கிய சிறப்பு கற்றல் மற்றும் வாழ்க்கைத் திறன் மேம்பாட்டு வழிகாட்டல் தான் எங்களுடைய சர்வதேச கற்றல் மற்றும் வாழ்வியல் திறன் மேம்பாட்டு நிறுவனம். 


 MSK முகயுதீன், 
MSK லைப் கிளீனிக் பவுண்டேசன், 
தொலைபேசி: 9360053930

Comments

Popular posts from this blog

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்