நல்லவன் தோல்வி அடைகிறான்! கெட்டவன் வெற்றி அடைகிறான்!! இதற்கான உளவியல் காரணம்
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! நல்லவன் தோல்வி அடைகிறான்! கெட்டவன் வெற்றி அடைகிறான்!! நல்லவன் தோல்வி அடைந்ததற்கு உளவியல் காரணம், அவனுக்கு ஒற்றை வழியில் மட்டுமே சிந்திக்க பழக்கப் படுத்தப் பட்டுள்ளது. மாற்று வழிகளில் சிந்திப்பது தவறு என புகட்டப்பட்டுள்ளது. ஆனால் கெட்டவனுக்கு எந்தவிதமான வழிமுறையும் கிடையாது. விதிமுறையும் கிடையாது. அவன் நம்புவதும் இல்லை. அவன் அதை அடைவதற்கு சூழ்ச்சியாக இருந்தாலும் சரி, வீழ்ச்சியாக இருந்தாலும் சரி, ஒற்றை நோக்கத்திற்காக பலவழிகளில் போராடுகிறான். இதில் முக்கியமான விஷயம் அவன் கடவுளை நம்புவதில்லை. நன்மை தீமை கணக்கு போடுவது இல்லை. அவ்வாறு சொல்பவர்களை தன் கூட வைத்துக் கொள்வதும் இல்லை. அவனது நோக்கம் அடைவதுதான். ஆகவேதான் கெட்டவன் உயர்கிறான். உயர்ந்த பின் அவன் நமக்கு கொடுக்கும் அறிவுரை இது. எல்லாம் கடவுள் கொடுத்தது என்னுடைய உழைப்பில் ஒன்றும் இல்லை. எனவே நீங்களும் இதே போல கடவுளை நம்புங்கள் என திசை மாற்றி விட்டு மற்றவர்களை அதே சிந்தனையில் வாழ வைத்து விடுகிறான். இவன் மாற்றுச் சிந்தனைகள