வாழ்க்கையில் வரும் பாதிப்புகள்

இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! 



 வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் பிறரால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்! இவைகளில் பெரும்பாலும் வார்த்தை சார்ந்த தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கலாம்… இந்த தாக்குதலை செய்பவர்கள் ஒன்று… பொறாமை காரணமாக செய்யலாம், அல்லது வெறுப்புணர்வு காரணமாக இந்த தாக்குதலை நடத்தலாம், அல்லது அவர்களுடைய மனநோயின் மாற்று வடிவம் பெற தாக்குதல்களை நீண்ட காலமாக செய்து வந்திருக்கலாம்.. இந்த தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்னுடைய செயலை திரும்ப திரும்ப நினைவூட்டி இப்படி ஆக்கிவிட்டார்களே என புலம்புகிறோம்… கோபப்படுகிறோம்… வேதனைப்படுத்திக் கொள்கிறோம். 



ஆனால் தாக்குதலை ஏற்படுத்தியவன் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே போன்ற உணர்வே இல்லாமல் மகிழ்ச்சியில் வாழ்கிறான்… தாக்கப்பட்ட நபர் அதை நினைத்து நினைத்து மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு கவலையில் வாழ்கிறார். இதற்கு என்ன தீர்வு? உளவியல் முறையில் எப்படி இந்த தாக்கப்பட்டவர் தன்னை புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதற்கான ஒரு சிறிய விளக்கம் தான் இந்த பதிவு… முதலில் தாக்கப்பட்டவர் இதுபோன்ற சூழல் உருவாகும் காரணத்தை கண்டறிந்து, சூழல் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது அந்த சூழ்நிலை ஒட்டிய நிகழ்வு நடந்தால் சுதாரிக்கும் நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 



தன்னை சுற்றியுள்ளவர்கள், பிறரைப் பற்றிப் பேசும்… பிறருடைய வளர்ச்சியை பார்த்து பொறாமை கொள்ளும் நோய் உடையவராக இருந்தால், அந்த நோயாளிகளிடத்தில் அதிக உறவு கொள்ளாமல், அவர்களிடத்தில் இருக்காமல், அவர்கள் கண்ணெதிரே தென்படாமல், நம்மை வருத்திக் கொள்வது மிகவும் நல்லது.. இந்த மன தொற்று நோய் உள்ளவர்கள் யாரைப் பார்த்தாலும் பிறரை பற்றி பேசி தான் நியாயம் உள்ளவர்கள் என நிரூபித்துக் கொள்வதற்கான முயற்சிகளை செய்து கொண்டே இருப்பார்கள்! அவர்களை மாற்றுவது இயலாத காரியம்… காரணம், இது மனநோய் என்பது அவர்களுக்கே தெரியாது! குடும்பத்தினருக்கும் தெரியாது.. ஆகவே இப்படிப்பட்ட நபர்களிடம் நம்மை பாதுகாத்துக் கொள்வது மிக மிக அவசியம். 



அவருடைய வார்த்தை மனதை துன்புறுத்தினால் அல்லது அவருடைய செயல் வேதனை படுத்தினால், உளவியல் ஆலோசனை எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம்… பிறரைப் பற்றி புறம் கூறும் நபர்கள் நம்மை சார்ந்தவர்களிடத்தில் வேறிடம் மூலமாக தகவலை சேகரிக்க ஆட்களை நியமித்து இருப்பார்கள். அப்படிப்பட்ட ஆட்கள் நம்மை சார்ந்தவர்களிடத்தில், அல்லது நம்மிடத்தில் வந்து அவர் இப்படி பேசுகிறார் என்பது போல பேச்சை கொடுத்து நம்மிடத்தில் இருந்து தகவலை சேகரித்து அதை திரித்து, பெரிதுபடுத்தி அங்கே சொல்வார்கள். ஆகவே யாரேனும் அப்படிப்பட்ட தகவலை உங்களிடத்தில் சேகரிக்க வந்தால், உடனடியாக அந்த தகவலை கூறாமல் அதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். அந்த தவிர்த்துக் கொள்ளுதல் கூட மிகவும் நுணுக்கமான முறையில் பேசி தவிர்த்துக் கொள்ள வேண்டும். 



இந்த தகவல் சேகரிப்பு வேலை செய்பவரின் நோக்கம்… இதைப் பற்றி சொல்லி அவர்களிடத்தில் வெகுமதி பெறவேண்டும் என்பதுதான். ஆகவே அவர்களுக்கு நாம் நம்மை அறியாமல் தகவலை கோபமாகவோ வெறுப்பாகவும் கொடுக்கக்கூடாது. அவர்களைப் பற்றிய பேச்சு வரும் பொழுது உணர்ச்சி வசப்படாமல் அந்த பேச்சை மாற்றி விட்டு, அந்த நபரிடத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும். அந்த நபரை அதிக நேரம் நம்மருகே வைத்துக் கொண்டால் நம்மை சுற்றியுள்ள தகவலை சேகரித்து அங்கு போய் பல வகையில் கூறுவார்கள். 



ஆகவே இந்தத் தொற்று நோய் உள்ளவர்கள் நம்மிடத்தில் அதிக நேரம் தங்கி இருப்பதை நாம் தவிர்க்க வேண்டும், அல்லது நாம் அந்த இடத்தில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.. அவர்களிடத்தில் நியாயம் கேட்பது, குறை சொல்வது, எதிர்த்துப் பேசுவது, கோபத்தை வெளிப்படுத்துவது, நம்முடைய பக்கம் உள்ள உண்மையை சொல்வது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். 



 MSK முகயுதீன், 
MSK லைப் கிளீனிக் பவுண்டேசன், 
தொலைபேசி: 9360053930

Comments

Popular posts from this blog

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்